Print this page

இறக்குமதி வாகனங்களின் விலை குறையும் வாய்ப்பு?

February 21, 2025

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் 600-700 பில்லியன் ரூபா வரி வருவாயை ஈட்ட எதிர்பார்க்கிறது என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்பார்க்கப்படும் வருவாயை ஈட்ட முடியாவிட்டால், வாகன இறக்குமதி வரி வரம்புகளைக் குறைப்பதில் மத்திய வங்கி கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாட்டின் பிரபல வாகன நிறுவனம் ஒன்று வாகனங்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆர்டர்கள் கிடைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அரசாங்கம் வாகனங்களுக்கு புதிய வரிகளை விதிப்பதற்கு முன்பு உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் பல ஆர்டர்களைப் பெற்றிருந்தாலும், வரிகள் விதிக்கப்பட்டதன் மூலம் அந்த முன்கூட்டிய ஆர்டர்களில் பெரும் எண்ணிக்கையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல இறக்குமதியாளர்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது முன்கூட்டிய ஆர்டர்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், மேலும் புதிய விதிமுறைகளின் கீழ் அவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

Last modified on Friday, 21 February 2025 07:51