Print this page

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தாக்குதல் சந்தேக நபர்கள்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான்
உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் டுபாயில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.