இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டார்.
சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும்
இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.