தற்போது சில பகுதிகளில் சம்பா மற்றும் கிரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த அரிசி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
ஒரு கிலோ கீரி சம்பா அரிசி ரூ.300க்கும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அரிசிக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச விலைகள் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, சில ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிக விலைக்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரிசிக்கு விதிக்கப்பட்ட மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை மாற்றப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்துகிறது.
அதன்படி, ஒரு கிலோ கெக்குளு அரிசியின் சில்லறை விலை ரூ.220, ஒரு கிலோ நாட்டு அரிசி ரூ.230, ஒரு கிலோ சம்பா அரிசி ரூ.240, ஒரு கிலோ கீரி சம்பா அரிசி ரூ.260 என அதிகாரசபை தெரிவித்துள்ளது.