Print this page

தபால் வாக்களிப்பு திகதி அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்மென தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

குறித்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.