Print this page

ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுமதி பொருட்களுக்கு விதித்துள்ள வரிகளால் இலங்கையில் ஒரு லட்சம் வேலைகள் இழக்கப்படும் என்றும், இது முழு உலகத்தையும் பாதிக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுங்க வரி மற்றும் கலால் வரிகளிலிருந்து அரசாங்கத்தால் மதிப்பிடப்பட்ட வருவாயைப் பெற முடியாது என்றும், இலங்கையில் மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் பொருளாதாரம் மோசமடைந்து வருவது அரசியல் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.