விடுமுறைக்காககல்கமுவ உறவினரின் வீடொன்றுக்கு சென்ற மீரிகம மற்றும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 17 வயது இளம் யுவதி ஒருவரும் 15 வயது சிறுமி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (13) மதியம் கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல எனும் ஏரியில் குளிக்கும் வேளையிலேயே இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் சடலங்கள் தற்போது கல்கமுவ ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.