Print this page

மாலனி பொன்சேகாவுக்கு மரணம் ஏற்பட காரணம் இதுவா?

மாலனி பொன்சேகா உட்பட இருபத்தி இரண்டு பேரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில்,மாலனி பொன்சேகா மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார் என்றும் அவர் கூறினார்.

இந்த முடிவு அவருக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே, அவரது பெயரை சம்பந்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவிக்குமாறு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டார்.