Print this page

பஸ் கட்டண திருத்தம் குறித்த நற்செய்தி

எதிர்வரும் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த விஷயம் தொடர்பாக மற்ற சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.