Print this page

மின்சாரக் கட்டணம் 15%ஆல் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுப் பயன்பாட்டு ஆணையத் தலைவர் கே.பி. எல். சந்திரலால் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

இது மிகவும் நியாயமான முடிவு என்று தலைவர் கூறினார்.

இந்த மாத முதல் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார வாரியம் சமீபத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியது.

இந்தச் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை அவசரமாக சரிசெய்ய வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின் பின்னணியில் இது அமைந்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட அளவில் பொது ஆலோசனைகள் சமீபத்திய நாட்களில் நடத்தப்பட்டன.