Print this page

மட்டு, அபிவிருத்திக்கு புதிய தலைவர்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கடந்த 11 ஆம் திகதி அந்தப் பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்றார், அன்றைய தினம் அவர் மட்டக்களப்பு மாவட்ட இணைப்புத் தலைவர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். சுனில் ஹந்துன்நெத்தி மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​கிழக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று சுனில் ஹந்துன்னெத்தி விரிவான அறிக்கைகளை வெளியிட்டார்.