தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட பொறியியல் பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 22 பேர், கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார்.மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த இந்த பகிடிவதைச் சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடந்த 19 ஆம் திகதியே முறைப்பாடு செய்யப்பட்டது.