Print this page

விசேட பாராளுமன்ற அமர்வு!

இந்த மாதத்தின் கடைசி நாளான 30 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விதிமுறைகளுக்கு இணங்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டியுள்ளார்.

எனினும், அன்றைய தினம் விவாதிக்கப்படும் தலைப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, மேலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.