Print this page

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டல்லஸ் நகர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 22 வயது என்றும், அந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த நபர் நடைபாதையில் இருந்து கொண்டு நீதிமன்ற நுழைவாயிலை நோக்கிச் சுட்டதாகக் கூறப்பட்டது.

குண்டு துளைக்காத சட்டையை அணிந்திருந்த அவர் தம் முகத்தை மறைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளால் சுடப்பட்ட நபர், மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் இரண்டு வருடம் இரணுவத்தில் பணிபுரிந்துள்ளதுடன், அண்மையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.