Print this page

மஹிந்த வசிக்கும் வீடு குறித்து எஸ்.பீ கருத்து

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய வீட்டு வளாகங்களைக் கட்டியதாகவும், தற்போதைய அரசாங்கம் அவற்றை மாற்ற எடுத்த முடிவுகளில் மகிழ்ச்சி அடைவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டியிருக்கும் என்றும், அந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தனது வழக்கமான வீட்டில் வசிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவது குறித்து, எஸ்.பி. திசாநாயக்க மேலும் கூறுகையில்,

"அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.. இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அவர்கள் வெளியேற வேண்டும். பிரேமதாசவின் மனைவி ஏற்கனவே வெளியேறிவிட்டார் என்று நினைக்கிறேன். திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் நிலைமை எனக்குத் தெரியாது. எனவே அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்."

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க இதனைக் கூறுகிறார்.

Last modified on Monday, 04 August 2025 02:36