Print this page

இணக்கபாடு இன்றி நிறைவு

அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கபாடு இன்றி நிறைவு பெற்றுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் கட்சி மட்டத்தில் தனித்தனியான சந்திப்புக்களை நடாத்தி தீர்மானம் ஒன்றை எட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பதவி விலகிய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.