மொனராகலையில் சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நிகழ்வை செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மொனராகலை, மகந்தன முல்ல வீதியில் உள்ள தனியார் விடுமுறை விடுதியில், சமகி ஜன பலவேகயவின் மொனராகலை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் தொடர்புடைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. எச். எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் மொனராகலை மாவட்ட அரசியல் அதிகாரசபையின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இந்தக் கூட்டம் கட்சியின் உள் விவகாரம் என்று கூறி வெளியேற்றப்பட்டனர்.