ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என கூறப்படுகிறது.
"அவருக்கு ஐ.சி.யூவில் சிகிச்சை தொடர மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே, பெரும்பாலும், அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த முடியாது. சூம் மூலம் ஆன்லைனில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டால், தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம்," என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என்று அவர் தெரிவித்தார்.