Print this page

வரிசையில் அடுத்தது சஜித்?

September 05, 2025

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்து சஜித் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.