கால்நடை தீவன விலை உயர்வு மற்றும் முட்டை விலை வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் முட்டை பற்றாக்குறை கூட ஏற்படக்கூடும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார்.
தீவன விலைகளுக்கும் முட்டை விலைக்கும் இடையே ஒரு உறவை உருவாக்க அரசாங்கம் தவறினால், எதிர்காலத்தில் முட்டை விவசாயிகள் முட்டை உற்பத்தியில் இருந்து விலகும் அபாயம் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
முட்டை விவசாயிகள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், விவசாயி, வர்த்தகர் மற்றும் நுகர்வோருக்கு நியாயமாக முட்டை விலைகளை பராமரிக்க ஒரு முறையான ஒழுங்குமுறை அமைப்பு தேவை என்றும் இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.