Print this page

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

September 11, 2025

நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதால், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

குடிநீர் விநியோகத்திற்காக நீர் பெறப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருவதால், நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு தொடர்ந்து நீர் விநியோகம் செய்ய முடியாது என்று நீர் வழங்கல் வாரியத்தின் ஹம்பாந்தோட்டை பிராந்திய பொறியியலாளர் ஜகத் ஸ்வர்ண லால் தெரிவித்தார்.

இதன் காரணமாகவும், அதிகப்படியான நீர் பயன்பாடு காரணமாகவும், பவுசர்கள் மூலம் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, லுனுகம்வெஹெர, ரன்மிஹிதென்ன, கிரிந்த, அங்குனுகொலபெலஸ்ஸ, முரவாஷிஹேன, கட்டுடகடுவ மற்றும் திஸ்ஸ-கதிர்காமம் பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பல பகுதிகளில் பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.