Print this page

மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை

September 17, 2025

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க இது தொடர்பில் கூறுகையில்,வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.