Print this page

தலைநகர் கொழும்பில் பாரிய தீ

September 20, 2025

கொழும்பு - புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெருவிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் 5ஆம் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைககளுக்காக 05 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலதிகமாக விமானப்படை விமானமும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.