Print this page

பரீட்சைகள் ஒத்திவைய்ப்பு

November 27, 2025

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் ( 27) மற்றும் நாளைய தினம் ( 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது. புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.