Print this page

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 13, 2025

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சமீபத்திய பேரிடர் நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலத்தின் அடிப்படையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மகப்பேறு மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நவம்பர் (30) வரை ஒரு முறை மட்டுமே ரூ. 5,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்.