Print this page

எதிர்வரும் நாட்களில் மழை நிலை அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பமான வானிலை நிலை, நாட்டின் வானிலையை தொடர்ந்து பாதித்து வருகிறது.

இதன் காரணமாக, ஜனவரி 05 முதல் எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும்.

மேலும், வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், மேலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வேகமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.