Print this page

IMF இலக்குகளில் மாற்றம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதங்களைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் ஒப்புக்கொண்ட இலக்குகளில் சிலவற்றை திருத்த இலங்கை முயற்சி செய்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள IMF குழுவின் விஜயத்தின் போது, பட்ஜெட் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

வருட முடிவில் வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், டிட்வா சூறாவளியின் தாக்கத்தை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் IMF இன் ஐந்தாவது மதிப்பாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் விளக்கினார்.