Print this page

ஜனாதிபதியின் கையொப்பத்துக்காக அனுப்பிவைப்பு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதியின் கையொப்பத்தை பெற்றுக் கொள்வதற்காக தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தொடருந்து சேவை துறைசார்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற பணியாளர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.