Print this page

அழைப்பினை மறுத்த தயாசிறி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாக போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் தான் ஆஜராக போவதில்லை என்றும் தயாசிரி ஜயசேகர கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Friday, 28 June 2019 07:54