Print this page

இலவச வீசா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் வீசா காலம் முடிவடைந்திருந்தாலும், எவ்விதக் கட்டணமுமின்றி 14 நாட்களுக்கு வீசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.