நாட்டின் வாக்காளர்களின் அறிவு மிகவும் குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் நாட்டுக்குள் இருந்தபோதிலும் மக்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் தாக்கத்தை வரும் சில மாதங்களில் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்றும், இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை போன்ற நாட்டை ஆட்சி செய்யத் தகுதியான அரசுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், நாட்டின் மக்கள் அவரை வீட்டில் இருந்து விடுமாறு கூறியுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தன்னைச் சேர்த்த குழு ஒன்றுபட்ட எதிர்க்கட்சியாக அமைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஒரு கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.