ஒரு ஏக்கர் அறுவடைக்கு விவசாயிகளுக்கு 15 லிட்டர் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்ததாவது உழவு (நெல் வயல் உழுதல்) பணிகளுக்காக 20 லிட்டர் எரிபொருள் வழங்கப்படும் என்றும் மேலும் இந்த எரிபொருளைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு QR குறியீட்டு முறை தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, எரிபொருள் வழங்கும் போது விவசாயிகள் நேரடியாகவும் சரியான அளவிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை, விவசாயிகளின் அறுவடை பணிகள் திறம்பட நடைபெறவும், வேளாண் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளை குறைக்கவும் மேற்கொள்ளப்படுகின்றது.