தடுப்பு காவல் உத்தரவு கீழ் குற்றப்புலனாய்வு துறை (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள குடும்பத்தினர் அனுமதி கோரியிருந்தாலும், இதுவரை அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (24) தினம் சலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடல்நிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி நிலைமையை பரிசீலித்ததுடன், பின்னர் அவரை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பேரில் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.