அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மூடாமல், வழக்கமான நிலையில் தொடரச் செய்து கொண்டு, நிலவும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார செயல்முறைகளை சீராக முன்னெடுத்து செல்ல அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்று அரசாங்கம் சர்வதேச நம்பிக்கையைப் பெற்றதுடன், சர்வதேச உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் சாதாரண செயல்பாடுகளை இடையறாது தொடரச் செய்ய தேவையான வலிமை கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாத்து, சவால்கள் மத்தியில் கூட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருந்ததாகவும், அந்த இலக்குகளை அடைவதில் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.