தமிழ் – சிங்கள புத்தாண்டு விழா காலத்தையொட்டி அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 163 மில்லியனை மீறும் வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக சாலை அபிவிருத்தி ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதில், ஏப்ரல் 12 ஆம் திகதி மட்டும் ரூபாய் 45 மில்லியனை மீறும் வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் அவசர நிலைக்கு உள்ளானால், 1969 அவசர அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு சாலை அபிவிருத்தி ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.