Print this page

முழு அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும்

முன்னாள் மின்சார மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, முழு அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டொலவத்த வலியுறுத்தியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் வரை, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது நெருங்கிய நண்பரான குமார ஜயகொடியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.