முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியாவில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமித்தம் வருந்திருந்த போது நுவரெலியா பழைய கடை வீதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக நுவரெலியாவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.