Print this page

வெப்பம் இன்றும் அதிகரிக்கும்

இன்று (22) பகல் நேரத்தில் சில மாகாணங்களில் வெப்ப குறியீடு (மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம்) “கவனம் செலுத்த வேண்டிய” அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொணராகலை மாவட்டத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.