Print this page

எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி ஊழல் செய்யும் குழுவே ஆட்சியில் உள்ளது

முன்னாள் ஆட்சியாளர்கள் தவறு செய்ததாகக் கூறி மக்கள் இம்முறை புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தாலும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி ஊழல் செய்யும் குழுவொன்று அதிகாரத்திற்கு வந்துள்ளதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பொருளாதாரக் களஞ்சியத்திலிருந்து அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அதன் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சில கீழ்மட்ட அதிகாரிகள்மீது சுமத்தி அரசு தப்பிக்க முயன்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டத்தை சமமாக அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசுக்கு அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும், அவ்வாறு உண்மையாகச் செயல்பட்டால் அரசில் உள்ள பலர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.