Print this page

NPPக்கு வாக்களித்தோர் பாவ நிவர்த்தி பெற வேண்டும்

NPP அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிடம் நான் சொல்ல விரும்புவது, களனி விஹாரைக்கு சென்று பாவத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதுதான்…” என்று அவர் கூறினார்.

ஒரு நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.