Print this page

இரு ஆளுநர்கள் திடீர் மாற்றம்


கடந்தவாரம் நியமிக்கப்பட்ட இரு ஆளுனர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் தென் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா, ஊவா மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 11 September 2019 01:34