இந்த ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜாதிக ஜன பலவேகய (NPP) நாடு முழுவதும் 21 மே தின அணிவகுப்புகள் மற்றும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதை குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மே தினக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றதை நினைவுகூர்ந்த அவர், இந்த முறை திட்டத்தை மாற்றியதற்கான காரணங்களையும் விளக்கினார்.
உலகளவில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கவும், எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கவும் அரசுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்த ஆண்டின் மே தின நிகழ்வுகளை மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் பரவலாக நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதன் மூலம் தூர இடங்களிலிருந்து கொழும்புக்கு பயணம் செய்ய வேண்டிய மக்களின் எரிபொருள் செலவை குறைக்க முடியும் என்பதில் NPP நம்பிக்கை வெளியிட்டுள்ளது.