மே மாதம் யுத்த வெற்றியின் மாதமாகக் கருதப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக அழைத்திருப்பதும் அங்கு சுரேஷ் சலே துன்பம் அனுபவிப்பதும் மோசமான நிலைமையென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “இது யுத்த வெற்றியின் மாதம். இவை அனைத்தும் டயஸ்போராவை மகிழ்விக்க செய்யப்படும் செயல்கள். அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.