Print this page

பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை அமைப்புகளுக்காக பயிற்சி பெறும் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) முறையில் மட்டுமே கோரப்பட்டிருந்தன.

மேலும், 2026.03.27 ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி இலக்கம் 2482 இன் படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் முன்பாக 2026.05.08 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2026.05.15 ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி இலக்கம் 2489 இன் அடிப்படையில், அந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் 2026.06.01 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், மேலதிக தகவல்களைப் பெற விண்ணப்பதாரர்கள் பொலிஸ் பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

• பொறுப்பதிகாரி (பொலிஸ் பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு பிரிவு) : 071-8591925

• அலுவலக தொலைபேசி இலக்கங்கள் : 011-2505202 / 011-2552953