Print this page

மஹர, கம்பஹா பகுதிகளுக்கு நீர்த் தடை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைகளில் இன்று (27) 12 மணி நேர நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (27) மாலை 7.00 மணி முதல் நாளை (28) காலை 7.00 மணி வரை நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க்குழாய் மாற்றும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.