Print this page

சட்டச் சிக்கல் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்

மாகாண தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

நிலுவையிலுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும்.

"மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது" என ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் அல்லது பல்வேறு தனிநபர்கள் வெளியிடும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. வெவ்வேறு நபர்கள் கூறும் அறிக்கைகள் எங்களுக்கு முக்கியமல்ல.

தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் நடத்தப்படும் வேளையில் அதற்கான நிதியைத் திறைசேரி விடுவிக்கும் என்றார்.