தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் காரணமாக தற்போதைய ஆட்சியும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நாட்டை முன்னேற்றக் கூடிய திறமையான ஒருவரிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அனுர விரைவில் கோட்டாபயவை சந்திக்கும் நிலை ஏற்படும். நாட்டை நடத்தக்கூடிய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளார்.