இந்த ஆண்டுக்கான வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள வெசாக் வலயங்கள், தோரணங்கள் மற்றும் விளக்கு அலங்காரக் கண்காட்சிகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பை மையமாகக் கொண்டு, கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, குருந்துவத்தை, தெமட்டகொட மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கொழும்பு நகரை மையமாகக் கொண்ட விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.