சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (08) அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணியும் அவரைச் சந்திக்க அனுமதி பெற்றிருந்ததாகவும், அப்போது தாம் உண்ணாவிரதத்தை இடையறாது தொடரப்போவதாக சலே தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தனது விவகாரம் தொடர்பான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளரை நீக்க வேண்டும் என்றும், தன்னைத் தடுத்து வைத்திருக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்றும் அவர் கூறியுள்ளதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், சுரேஷ் சலேவுக்கு மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ள சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் கலந்து கொண்ட உதய கம்மன்பில எந்தவித தடைகள் ஏற்பட்டாலும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை அனுராத யகம்பத், சுரேஷ் சலே விடுவிக்கப்படும் வரை இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடரும் என்றும், இது போர்வீரர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும் என்றும் கூறியுள்ளார்.


