எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்ததால், மின்சார கட்டணத்தையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் குறையும் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும், அதனுடன் இணைந்து எரிபொருள் விலையும் மின்சார கட்டணமும் எந்த தயக்கமும் இன்றி கட்டாயமாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அண்மையில் அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ.354 வரை உயர்ந்திருந்த போதிலும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அது மீண்டும் ரூ.334 வரை குறைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்பாராத சூழ்நிலைகள் நீங்கிய பின்னர், தற்போதைய விலையை விடவும் குறைந்த அளவிற்கு எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.